Monday, March 1, 2021

தூது.... முகநூல் தொடர்..(3)

 3வது தூது- (1984 பெப்ரவரி)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

    இவ்விதழின் ஆசிரியத் தலையங்கத்தில், விமர்சனம் என்ற பேரில்  பிரதியொன்றை ஏசிக் கிழிப்போர் பற்றி ஒரு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது...  


இவ்விதழில், சுலைமா ஏ.ஷமி- மருதூர் அப்டுல் ஹசன்,- ஜிப்ரியா ஷெரீப்,- பாண்டியூர் நாகா- பாவலர் பஸீல்காரியப்பர்- கல்முனை ஆதம்- நஸீரா லாபீர்- தம்பிலுவில் ஜெகா-  எம்.ஏ. ரஹிமா- கட்டுகொட மஷீதா ஹம்சா- பாத்திமா மைந்தன் - நற்பிட்டிமுனை பளீல்-  முருகு- Ashrafa Noordeen அஷ்ரபா நூர்டீன் ஆகியோரின் கவிதைகள் வந்திருந்தன.


காதோரம் பகுதியில் 1980 இல் தினபதி நடத்திய கையெழுத்துப் பத்திரிகைப் போட்டியின் முடிவுகள் வெளியிடப்படாமை பற்றி விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அடுத்த தூது இதழ் ஆண்டு மலராக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 3 வது வெளியீட்டை அச்சகத்திலிருந்து எடுத்து வரும்போது சுற்றிவளைப்பில் அகப்பட்டு ‘’தமிழீழப் பிரசுரம்’’ என்று கல்முனை பொலிசில் மாட்டி ஒரு புண்ணியவானின், உதவியால் விடுவிக்கப்பட்டதும், புகவம் உறுப்பினர்களின் வீடுகளில் எழுந்த பயங்கர எதிர்ப்புகளும், தடைவிதிப்புகளும்  ஒரு தனிக்கதை......

(கல்முனை மாநகரசபை முன்னாள் மேயர் சிராஜ் மீராசாஹிப் அவர்களின் தந்தையாரான மர்ஹூம் ஏ.மீராசாஹிப் JPஅவர்களே அந்தப் புண்ணியவான்)

௦௦



No comments:

Post a Comment