Tuesday, March 2, 2021

தூது..முகநூல் தொடர்..(1)


1வது தூது- (1983 ஓகஸ்ட்)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

 ‘இலக்கியத் தூதே இலட்சியத் தூது’ என்ற மகுட வாசகத்துடன் 6 பக்கங்களுடன் கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல் சேர், பாவலர் பசில் காரியப்பர் சேர்  ஆகியோரின் மறைமுக ஆதரவுடன் வெளியானது முதலாவது தூது. அன்பளிப்பு ரூ;1/-.


இதில் ஜமீல் சேர் அவர்களின் சிந்தனையில் உருவான இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் சம்பந்தமாக ஆசிரியர் தலையங்கம் கூறியது...

 

இவ்விதழில், கொக்கூர்கிழான் கா.வை. இரத்தினசிங்கம்- ஜூல்பிகா ஷரீப்- பூபால் கதிரவேல்- மஷூறா.ஏ மஜீட்- றாபீக்- கள்ளொளுவை பாரிஸ்-  ரஷீட் நூறுல் ஐன்- தீரன்- நஸீறா லாபீர்- ராதா வேல்முருகு- அல்வை சயானந்தன்- உதயா அம்பலவாணி- அபுஇம்தியாஸ்- கலாவிஸ்வநாதன்- ஆகியோரின் 17 கவிதைகள் வெளியாகியிருந்தன..  


எம்.ஆர். சுமனின், காதோரம் என்னும் இலக்கியத் தகவல் பகுதியில் காவலூர் ஜெகநாதனின் ‘மாருதம்’- அல் அஷூமத்தின் ‘பூபாளம்’-  என்.பி. கனகலிங்கத்தின் ‘சந்திப்பு’- கணமகேஸ்வரனின் ‘தாரகை’- குமரன் சஞ்சிகையின் 65 வது இதழ் ஆகிய சஞ்சிகைகளின் விபரங்கள் இடம்பெற்றிருந்தன.


ஆசிரியர்; ஆர்.எம். நௌஷாத்

இணை ஆசிரியர்கள்; கல்முனை ஆதம், எஸ்.எம்.எம். றாபிக்

கல்முனை பைன் ஆர்ட்ஸ் அச்சகத்தில்  நண்பர் கல்முனை முபாரக்கின் ‘அல்-ஜஸீரா’ அச்சுச் சாதனங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.. வெளியிட்டாசிரியர்.; கல்முனை அபூ.

௦௦



No comments:

Post a Comment