வெள்ளைத்
தாஜ்மகால்
கறுப்புக்
கண்ணாடி அணிந்த
வெள்ளைத்
தாஜ்மகால் நீ
கூலிங்
கிளாஸ் போட்டிருக்கும்
கூதல்
காற்று நீ..
கரையில்
வந்த
கடற்கண்ணி
நீ
நுரைகள்
எழுதிய
கடற்கவிதை
நீ
௦௦
அவுஸ்திரேலிய நாட்கள்
இலங்கையில்
நீ
இல்லைஎன்று
இலங்கை
இலங்கவில்லை
எதுவும்
இயங்கவில்லை..
ஆனால்,
மெல்பேர்னின்
பனிக்காற்று
உனக்குப்
பரவசமாய்
பாட்டு
எழுதுகிறது..
அவுஸ்திரலியாவின்
தேசியக்
கொடியில்
அது
உன்
பெயரை
எழுதிப்
பார்க்கிறது..
மூரே
நதி
உன்
பாதங்களை
முத்தமிடுகிறது
அந்த
வெள்ளைக்கார
மண்ணுக்கு
மனுப்
போட்டிருக்கிறேன்
உன்னை
சீக்கிரம்
இங்கு
அனுப்பும்படி.
O
கவிதை
நடை
நடந்து
வா..
வண்ணப்
பூக்கள் உன்னை
வரவேற்கின்றன
சின்னப்
பூக்கள்
கைகுலுக்கிச்
சிரிக்கின்றன
புற்தரை
எங்கும், உன்
புன்னகை
சிந்தியதால்
புதிதாய்
பூக்கின்றன
பூக்கள்..
புன்னகை
புரி..
உன்
பாதங்கள்
பட்ட இடமெல்லாம்
பசுமை
பாய் விரிக்கின்றதே..
நீ
பார்க்கும்
போதெல்லாம்
பச்சைப்
புல்லும் அல்லவா
வெட்கப்படுகிறது..
வா..
நடந்து
வா.
.
கொடிகள்
கூட உன்னில்
படரத்
துடிக்கின்றன..
செடிகள்
என் காதலைச்
சொல்கிற
சேதியை
வாசிக்க
-
நடந்து
வா என் அன்பே
O
கொடுமைக்காரி
தூங்குகிறேன்
தூங்கவில்லை நினைவுகள்
எழுதுகிறேன்
எழுதவில்லை எதையும்...
என்ன கொடுமைக்காரி நீ
எது செய்யவும்
விடுகிறாயில்லை..
௦௦
No comments:
Post a Comment